அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி
மோசடி
மூங்கில்துறைப்பட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் போலீசில் புகார் மனு அளித்தனர். பொருவளூரைச் சேர்ந்தவர் விஜயா கவுரி, 35; அண்ணா நகர் அமுதா, 50; பொரசப்பட்டு ரமேஷ், 25; ஆகியோர் மூங்கில்துறைப்பட்டு போலீசில் அளித்துள்ள புகார் மனு:மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த ஒரு தனிநபர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story