கரூர் வருகை தந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு.

கரூர் வருகை தந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு.
கரூர் வருகை தந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு. பணப்பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவையடுத்து 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த 26-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார். அதனை தொடர்ந்து செந்தில்பாலாஜி மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில், ஜாமினில் இருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக சொந்த ஊரான கரூருக்கு அக்டோபர 6-ம் தேதி மாலை 6 மணி அளவில்அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தந்துள்ளார். கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பயணியர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சர் செந்தில்பாஜியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா, அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story