நாமக்கல்லில் பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மனுக்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தட்டி எழுப்பி செயல்பாட்டிற்கு கொண்டு வர பத்து ரூபாய்க்கு சார்பாக மாபெரும் மனுநீதி கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பாகவும் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இதுவரை பல மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதும் இல்லை அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இந்த மனுக்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தட்டி எழுப்பி செயல்பாட்டிற்கு கொண்டு வர பத்து ரூபாய்க்கு சார்பாக மாபெரும் மனுநீதி கோரி ஆர்ப்பாட்டத்தை பத்து ரூபாய் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட மாநகர செயலாளர் எம்.சுப்பிரமணி தலைமையில்,மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார் வாழ்நாள் துணை பொதுச்செயலாளர் டெஸ்மா வீரபாண்டியன் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. சீனிவாசன் முன்னிலையில் நடைப்பெற்றது, இதில் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜி சிறப்புரை ஆற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் பாலு, பாலசுப்பிரமணி, பழனிச்சாமி, கதிர்வேலு, மாநகர் அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர்கள் மகேஸ்வரி, பழனிவேலு, நகர செயலாளர்கள் பழனிச்சாமி, கணேசன், ஒன்றிய செயலாளர்கள் லோகநாதன், தேவதாசன், வெங்கடாசலம், முத்துகிருஷ்ணன் பிரகாஷ், செல்வகுமார், ஸ்ரீதர், மற்றும் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ரேவதி மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். சமூக நீதி அனைத்து ஓட்டுநர் சங்க மாநில பொதுச்செயலாளரும் பத்து ரூபாய் இயக்கத்தின் ஆலோசகர் பத்மராஜ் நன்றி கூறினார்.
Next Story