ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியைச் சோ்ந்த சிறுமி பேருந்து மோதி உயிழந்தார்
Andippatti King 24x7 |7 Oct 2024 2:43 PM GMT
வேலுச்சாமி மகள் காளீஸ்வரி (17) பேருந்து மோதி உயிரிழந்தார்
ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியைச் சோ்ந்த வேலுச்சாமி மகள் காளீஸ்வரி (17). இவா், தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே தனது உறவினா்கள் சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து மோதியதில் அதன் சக்கரத்தில் சிக்கி காளீஸ்வரி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் உப்பாா்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story