சாலை விபத்தில் காவலாளி பலி!

சாலை விபத்தில் காவலாளி பலி!
விபத்து செய்திகள்
விராலிமலை சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் ராம்பிரபு (48). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பல்கலைக்கழகம் எதிரே உள்ள திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்ற கார் மோதியது. இதில் கீழே விழுந்த ராம்பிரபு மீது பின்னால் வந்த டேங்கர் லாரி ஏறியதில் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story