தாந்தோணி மலை மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம்.

தாந்தோணி மலை மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம்.
தாந்தோணி மலை மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம். கரூர் மின் வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட 110 / 11 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கிலோ வாட் மணவாடி பீடரில், அக்டோபர் 9-ம் தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்று இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கனிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் மேற்கொண்ட தாந்தோனி மலை துணை நிலையத்துக்கு உட்பட்ட மணவாடி, கத்தாளப்பட்டி, கத்தாளப்பட்டி புதூர், சீத்தப்பட்டி, சின்னதம்பி பாளையம், செல்லிபாளையம், மருதம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது எனவும், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்கூட்டியே தங்கள் பணிகளை திட்டமிட்டு முடித்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Next Story