உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2024-25-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர் பெருமக்கள், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story