பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.

பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.
திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் மற்றும் பூலாம்பட்டி பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.
தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவின் பேரில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி, பகுதிகளில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு,மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அன்றாட பொதுமக்களின் விலைவாசி உயர்வு, உள்ளற்றவை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற நடைபெற்றது அதேபோல் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே எடப்பாடி ஒன்றிய அதிமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ் தலைமையில் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கம் போராட்டமானது, பூலாம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து மேட்டூர் சாலை பிரிவு வரை அதிமுக தொண்டர்கள் மனித சங்கிலி அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பூலாம்பட்டி பேரூராட்சி செயலாளர் ஜெயராமன், எடப்பாடி ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ், எடப்பாடி வடக்கு ஒன்றிய ஜே பேரவை செயலாளர் மாதேஸ்வரன். எடப்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் ராணி முத்து கண்ணு உட்பட 500க்கு மேற்பட்ட  தொண்டர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கொங்கணாபுரம் ஒன்றியம் சார்பில் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இப்ப போராட்டத்தில் கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் ராஜா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.   எடப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகில் எடப்பாடி நகர அதிமுக  சார்பிலும் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நங்கவள்ளி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பிலும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story