உழவர் சந்தை அருகே நின்று கொண்டு இருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு. இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் கைது.

உழவர் சந்தை அருகே நின்று கொண்டு இருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு. இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் கைது.
உழவர் சந்தை அருகே நின்று கொண்டு இருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு. இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் கைது. திருச்சி மாவட்டம், முசிறி, ராக்கம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 34.இவர் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே உள்ள காவேரி அம்மன் திருமண மண்டபம் அருகே செல்வகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேலம் மாவட்டம், சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் வயது 31, இதே போல ராயனூர் இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் மனைவி நகுலேஸ்வரி வயது 30, சந்தன் மனைவி கனிஷ்டா ராணி வயது 44 ஆகிய மூவரில், நகுலேஸ்வரி மற்றும் கனிஷ்டாராணி ஆகிய இருவர் செல்வகுமாரை சட்ட விரோதமாக தடுத்து நிறுத்தினர். அப்போது சந்திரமோகன் கத்தியை காட்டி மிரட்டி, செல்வகுமார் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூபாய் 1100 பறித்துள்ளார். அப்போது செல்வகுமார் கூச்சலிட்டதால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூவரையும் பிடித்து வைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 800 ஐ பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story