டி.இடையப்பட்டியில் பொதுப் பாதையை பயன்படுத்துவதில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது.

டி.இடையப்பட்டியில் பொதுப் பாதையை பயன்படுத்துவதில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது.
டி.இடையப்பட்டியில் பொதுப் பாதையை பயன்படுத்துவதில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, டி.இடையப்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மனைவி சங்கீதா வயது 35. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகாமையில் வசித்து வருபவர் மருதை வீரன் வயது 52.இவரது மகன் முருகானந்தம் வயது 28. இவர்கள் இரு குடும்பத்தாரிடையே வீட்டின் அருகாமையில் உள்ள பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், இதே பிரச்சனையில் அக்டோபர் 5-ம் தேதி இரவு 7:45- மணி அளவில் மீண்டும் பிரச்சனை எழுந்த போது, முருகானந்தம் மற்றும் மதுரை வீரன் ஆகிய இருவரும் தன்னிச்சையாக சென்று, சங்கீதாவை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கியும், தலை முடியை பற்றி இழுத்து, கீழே தள்ளி துன்புறுத்தி, மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகார் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை வீரன் மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர். .
Next Story