ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது : ஆம்னி வேன் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது : ஆம்னி வேன் பறிமுதல்
திருச்செந்தூரில் ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், கோயில் காவல் நிலைய ஆய்வாளர் செல்வன், தலைமைக் காவலர் மனோகரன், போலீசார் இரவு ரோந்து சென்றனர். வடக்கு மாடவீதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் திருச்செந்தூர், அமலிநகர் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் ரமேஷ்குமார் (19) என்பவர் விற்பதற்காக 600 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர். ரேஷன் அரிசி, ஆம்னி வேனை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் அரிகண்ணனிடம் ஒப்படைத்தனர்.
Next Story