ஆண்டிப்பட்டி கோட்டை மாரடைப்பால் உயிரிழந்த தெலுங்கானா மாநில தொழிலாளி.
Karur King 24x7 |8 Oct 2024 10:46 AM GMT
ஆண்டிப்பட்டி கோட்டை மாரடைப்பால் உயிரிழந்த தெலுங்கானா மாநில தொழிலாளி.
ஆண்டிப்பட்டி கோட்டை மாரடைப்பால் உயிரிழந்த தெலுங்கானா மாநில தொழிலாளி. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ரமிசெட்டி நாக ஸ்ரீனிவாச ராவ் வயது 40. இவர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, ஆண்டிப்பட்டி கோட்டை டோல்கேட்டில் சப் கான்ட்ராக்டராக செயல்பட்டு வருகிறார். இவரிடம் தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி மகன் அனங்கம் அசோக் வயது 44 என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி காலை எட்டு மணி அளவில், ஆண்டிப்பட்டி கோட்டை டோல்கேட் பகுதியில் உள்ள அறையில் தங்கி இருந்த அனங்கம் அசோக்கிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரெமிச்செட்டி நாக சீனிவாசராவ், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த அனங்கம் அசோக் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story