மோகனூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மோகனூர் ஒன்றிய, பேரூர் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ராஜவடிவேல் தலைமையில் துவங்கியது ,
திமுக அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் ஆண்டுதோறும் மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வால் பல்வேறு வகைகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதை கண்டித்து அதிமுக சார்பில், தமிழக முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மோகனூர் ஒன்றிய, பேரூர் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ராஜவடிவேல் தலைமையில் துவங்கியது , மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் குப்புசாமி சிறப்புரையாற்றினார். இதில் நகர அவைத் தலைவர் ஆசைத்தம்பி, நகர துணை செயலாளர் சிவஞானம் ,புதுப்பட்டி மதி, ஒன்றிய பொருளாளர் சுதாகர், தகவல் தொழில்நுட்ப செயலாளர் நவீன், முன்னாள் பேரூராட்சி செயலாளர் தங்கமுத்து அண்ணாதொழிற்சங்க பாஸ்கர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆப்பிள் முருகேசன், நகர பொருளார் தவித் மற்றும் அதிமுக பேரூராட்சி மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story