பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
திமுக அரசை கண்டித்து பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் சார்பில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கடந்த 40 மாத காலமாக ஆட்சி பொறுப்பில் உள்ள திமுக அரசின் தவறான நிர்வாகத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இதில் மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு பேருந்து கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை திமுக அரசு வஞ்சித்து வருகிறது . எனவே இதனை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பள்ளிபாளையம் அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டமானது பள்ளிபாளையம் நகராட்சி முன்பு நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். அதிமுக நகர செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தார். 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்று திமுக அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முதல் ஒட்டமெத்தை பிரிவு சாலை வரை திரளானோர் கலந்து கொண்ட இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பள்ளிபாளையம் அதிமுக ஒன்றிய செயலாளர் சேர்மன், செந்தில் ஆலாம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் செல்லதுரை, அம்மா பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி அதிமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் பாசறையினர், ஐடி விங் தொழில்நுட்ப பிரிவினர் என பலர் கலந்து கொண்டனர்
Next Story