பரமத்திவேலூர் மாரியம்மன் கோவில் மண்டலம் பூஜை சிறப்பு அபிஷேகம்.

பரமத்தி வேலூர் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் அக். 08: பரமத்தி வேலூர் காவிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று இன்றுடன் 29 நாட்கள் முடிவடைந்துள்ளது. இன்று நடைபெற்ற 29ஆம் நாள் மண்டல பூஜையில் மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களை கொண்டு மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story