சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் தொழிற்சங்க அனுமதி, ஊதிய உயர்வு, பணி நேர வரன்முறை | உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 37 நாட்களாக போராடி வந்தனர். இந்த நிலையில் தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சி ஐ டி யு தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் .போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு தமிழக விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும், சிஐடியு தொழிற்சங்கத்தில் அதிகமான தொழிலாளர்கள் உள்ளதால் பேச்சுவார்த்தையில் சிஐடியு தொழிற்சங்கத்தை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் சாம்சங் தொழிலாளர்கள் 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் தமிழக விவசாயிகள் சங்கமும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து போராடி வருகிறது. தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
Next Story