பொறுப்பு நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றார்

பொறுப்பு நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றார்
குமாரபாளையத்தில் பொறுப்பு நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றுகொண்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பொறுப்பு நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றுகொண்டார். குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக குமரன் பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு காரணமாக திண்டிவனத்திற்கு பணி மாறுதலில் சென்றார். இதனால் குமாரபாளையம் நகராட்சியில், ராசிபுரம் நகராட்சி கமிஷனர் கணேஷ், பொறுப்பு கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன், உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story