முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ட்ரினிட்டி கல்லூரி மாணவி.

நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் ட்ரினிட்டி கல்லூரி மாணவி இரண்டாம் இடம்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 10 செப்டம்பர் 2024 முதல் 24 செப்டம்பர் 2024 வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி. மதுமதி, வாள்வீச்சு போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். எஸ். பிரீத்தி, சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் மூன்றாமிடமும், கே. கோபிகா & ஏ. என். ஹசீன் மெகமுதா, பூப்பந்து போட்டியில் 3-ம் இடம், எஸ். பவதாரிணி, பளு தூக்கும் போட்டியில் 3-ம் இடம், எஸ். மேகலா, குத்துச்சண்டையில் 3-வது இடம், எஸ். சசிகலா, குண்டு எறிதலில் 2-ம் இடமும் பெற்றுள்ளனர். இதில் இரண்டாமிடம் பெற்ற வீராங்கனைகள் ரூ. 2000- க்கான ரொக்கப்பரிசினையும், மூன்றாம் இடம் பெற்றவர்கள் ரூ. 1000-க்கான ரொக்கப் பரிசினையும் பெற்றனர். மேலும், இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற எஸ். பவதாரிணி, எஸ். பிரீத்தி, எஸ். மேகலா & எஸ். சசிகலா ஆகியோர் வரும் 21 அக்டோபர் முதல் 24 அக்டோபர் 2024 வரை சென்னை - பூங்கா நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலானப் போட்டிகளில் பங்கு பெற உள்ளன. இவர்களுக்கான பாராட்டு நிகழ்வில் கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர் லட்சுமிநாராயணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் வீ அர்ச்சனா ஆகியோர் பாராட்டினர்.
Next Story