வாணியம்பாடியில் கல்வித்துறை அமைச்சர் உருது பள்ளியில் ஆய்வு

வாணியம்பாடியில் கல்வித்துறை அமைச்சர் உருது பள்ளியில் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பள்ளியில் உருது மொழியில் தனது பெயரை எழுதி மாணவர்களை படிக்க சொன்ன பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். இந்நிலையில்ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட அரசு உதவி பெறும் மஸாரல் உலூம் உருது மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உருது மொழிப்பாட வகுப்பில் அமர்ந்து கற்றல் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தனது ‘அன்பில்’ எனும் பெயரை உருது மொழியில் எழுதி உருது பயிலும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, அதை வாசித்துக் காண்பிக்கச் சொன்னார். உருது கற்பிக்கும் ஆசிரியர் அமைச்சரின் முழுப்பெயரை உருது மொழியில் எழுதி அமைச்சருக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
Next Story