கரூர்- கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

கரூர்- கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கரூர்- கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருமாநிலையூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற கொலை வழக்கில், கரூர் மாவட்டம், ராயனூர் பெட்ரோல் பங்க் எதிரில் வசித்து வரும், பாண்டியன் மகன் வீரமலை வயது 36 என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கைது செய்யப்பட்ட வீரமலை மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். கொலை தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இன்று வீரமலை மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
Next Story