கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை!

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை!
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிமாக தடை விதித்து உள்ளது .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் இருந்து வருகிறது . இந்த நிலையில் பேரிஜம் ஏரிக்கு வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கி செல்ல வேண்டும் . இந்த நிலையில் அப்குதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சென்று ரசிப்பதற்கு வனத்துறை ஆனது தற்காலிகமாக தடை விதித்திருந்தது . யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் . இதனால் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு செல்ல முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் . எனவே யானையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது .
Next Story