மீண்டும் அதிர்ந்தது வடமதுரை வீடுகளில் பொருட்கள் சரிந்தன

மீண்டும் அதிர்ந்தது வடமதுரை வீடுகளில் பொருட்கள் சரிந்தன
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் பயங்கர வெடிச்சத்தத்துடன் அதிர்வு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்று மதியம் 12:01 மணிக்கு பயங்கர வெடிச்சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்ட நிலையில் வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் சரிந்து விழுந்தன.வடமதுரை, தாமரைப்பாடி, எரியோடு, வேடசந்துார், சாணார்பட்டி பகுதியில் சில வார இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பதை உணரமுடிகிறது. சில ஆண்டுகளாகவே இது தொடர்கிறது. இதனால் பலமற்ற, பழமையான கட்டடங்களில் விரிசல்கள் என பாதிப்பு ஏற்படுகிறது. நேற்றும் இங்கு சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்ட நிலையில் வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் சரிந்து விழுந்தன. வெடிச்சத்தம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து இதுவரை அரசு, மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான விளக்கம் தரவில்லை.
Next Story