விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

பரமத்திவேலூரில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக எம்எல்ஏ சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்,அக்.9- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் மற்றும் பரமத்தியில் அ.தி.மு.க சார்பில் மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பரமத்தி வேலூர் பஸ் நிலையம் எதிரில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு பரமத்திவேலுார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், பரமத்தி ஒன்றிய கழக செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித சங்கிலி போராட்டத்தில் மின்கட்டணம், சொத்துவரி, குடிநீர் வரி, பால்விலை, பத்திரப்பதிவு கட்டணம், அத்தியாவசிய பொருட்கள், காய்கறி விலை உயர்வை கண்டித்தும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க- வினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் குற்றச் செயல்களை தடுத்திட கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதே போல் பொத்தனூர், பாண்டமங்கலம் மற்றும் பரமத்தியில் மணித் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story