கந்தசாமி கண்டர் கல்லூரியில் இரத்ததான முகாம்.

கந்தசாமி கண்டர் கல்லூரியில் இரத்ததான முகாம்.
பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் தேசிய மாணவர் படை (விமானப்படை) வேலூர் அரிமா சங்கம் ஈரோடு சுப்ரீம் ரத்த வங்கி மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்தசாமி கண்டர் அறநிலையங்களின் தலைவர் இர. சோமசுந்தரம் தலைமையில் கல்லூரி முதல்வர் பொ.சாந்தி அவர்கள் முன்னிலையில் வேலூர் அரிமா சங்க முன்னாள் தலைவர் பி. மோகன், தலைவர் சிவக்குமார், சண்முகம், தேவராஜ்,நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் R. மாதவன் M. அருணாராணி M. பிரபு M. ஜெகன் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி( விமானப்படை) பிளையிங் ஆபிசர் முனைவர் மு. சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 64 யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டது.
Next Story