கோட்டமேடு அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேடு அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு 48 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் கலைமதி, ஆசிரியர் தங்கமுத்து, திமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், வழக்கறிஞர் நீலமேகம், இருபால் ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story