பாமக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்.

பாமக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்.
ஆரணி, அக் 10 பாமக தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி அருகே ராட்டிணமங்கலம் கூட்ரோடு எஸ்பிஐ வங்கி அருகில் பாமக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் பிறந்த நாள் முன்னி்ட்டு ஆரணி அருகே ராட்டிணமங்கலம் கூட்ரோடு எஸ்பிஐ வங்கி அருகில் உள்ள சரஸ்வதி கிளினிக்கில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பாமக மாவட்ட தலைவர் ஆ.வேலாயுதம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அ.பிச்சாண்டி அனைவரையும் வரவேற்றார். மாவட்டதுணைசெயலாளர் து.வடிவேல், வன்னியர் சங்க மாவட்டசெயலாளர் அ.கருணாகரன், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் ஜெ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மாவட்ட நிர்வாகிகள் சேவூர் அ.குமார், மெய்யழகன், புங்கம்பாடி ஏழுமலை, ஏ.கே.ராஜேந்திரன், சேவூர் சிவா, நகரசெயலாளர்கள் சதீஷ்குமார், இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அஜித்குமார், பெருமாள், அண்ணாமலை, அகிலன்பாபு, தினேஷ், அக்கூர் பெருமாள், கமல், மகளிரணி ரேவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிதல், எலும்பு சம்பந்தம்பட்ட நோய்களுக்கான பரிசோதனை, நுரையீரல் சம்பந்தப்பட்ட பரிசோதனை, குழந்தைகளுக்கான பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது. மேலும் நோய் கண்டறியப்பட்டு மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டது. இதில் நுரையீரல் மருத்துவர் ஆர்.சிவரஞ்சனி, எலும்பு முறிவு மருத்துவ் பி.பிரகதீஷ்வரன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் வி.சண்முகம், குழந்தை நல மருத்துவர் எஸ்.சண்முகம், பல் சிகிச்சை மருத்துவர் எஸ்.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு உடல் பரிசோதனை செய்தனர்.
Next Story