வீ. ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் நவராத்திரி விழா.
Rasipuram King 24x7 |10 Oct 2024 1:44 PM GMT
வீ. ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் நவராத்திரி விழா.
மல்லூர் வீ. ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மூன்று படிகளில் அடுக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பள்ளி வகுப்பு மாணவ, மாணவிகளால் பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் கொலு பொம்மையாக வீற்றிருக்கும் கடவுளின் திருவுருவம் போல உடையணிந்து வந்தனர். பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு நவராத்திரி கொண்டாடுவதன் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார். நிர்வாக அலுவலர் வினோத்குமார் உடனிருந்தார். மாணவ மாணவிகளை ஊக்குவித்த ஒருங்கிணைப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளி முதல்வர் கணேஷ் வாழ்த்து தெரிவித்தார் .
Next Story