பரமத்திவேலூர் வாழைத்தார் ஏல சந்தையில் வாழைத்தார்கள் விலை உயர்வு.

பரமத்திவேலூர் வாழைத்தார்ஏல சந்தையில் வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் மற்றும்  சுற்று வட்டார பகுதிகளான பொத்தனூர், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம்‌ உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தார் ஏல சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுக்கப்படும்  வாழைத்தார்களை வியாபாரிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.600- ‌க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.250- க்கும், ரஸ்தாளிரூ.400-  க்கும், கற்பூரவள்ளி  ரூ.500- க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 - க்கும் ஏலம் போனது. நேற்று  நடைபெற்ற ஏலத்தில்  பூவன் வாழைத்தார் ரூ.750- க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.350- க்கும், ரஸ்தாளி வாழைத்தார் தார் ரூ.450- க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ரூ.350- க்கும், மொந்தன் ஒரு காய் ரூ.6- க்கும்  ஏலம்போனது.
Next Story