ராசிபுரத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பட்ட துளசி அம்மனுக்கு சிறப்பு பூஜை..

ராசிபுரத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பட்ட துளசி அம்மனுக்கு சிறப்பு பூஜை..
ராசிபுரத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பட்ட துளசி அம்மனுக்கு சிறப்பு பூஜை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்ட துளசி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி, மேலும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அதன்படி ஸ்ரீ பட்ட துளசி அம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், அரிசி மாவு கரைசல், இளநீர், பன்னீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகமும், சொர்ண அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பட்டத்துளசி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கட்டளைதாரர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story