ஆரணி எம்.பி நன்றி பிரச்சார கூட்டம்.

ஆரணி எம்.பி நன்றி பிரச்சார கூட்டம்.
ஆரணி, அக் 11 ஆரணி பகுதியில் நடைபெற்ற நன்றி பிரச்சார கூட்டத்தில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு நன்றி கூறினார்.
ஆரணி பகுதியில் நடைபெற்ற நன்றி பிரச்சார கூட்டத்தில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு நன்றி கூறினார். கடந்த மக்களவை தேர்தலில் ஆரணி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் எம்.எஸ்.தரணிவேந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக ஆரணி அடுத்த தெள்ளூர், தச்சூர், அரையாளம், புங்கம்பாடி, முள்ளிப்பட்டு காட்டுக்காநல்லூர் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நன்றி பிரச்சார கூட்டத்தில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி பேசினார். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, மேற்கு ஆரணி ஒன்றிய குழு பெருந்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் ஒன்றிய செயலாளர் மாமது, முன்னாள் ஒன்றியகவுன்சிலர் முள்ளிப்பட்டு இரவி காங்கிரஸ் கட்சியின் மாவட்டதலைவர் எஸ்.பிரசாத், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story