பெட்டிக்கடையில் புகையிலை விற்ற பெண் மீது வழக்கு

பெட்டிக்கடையில் புகையிலை விற்ற பெண் மீது வழக்கு
இரண்டு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லடை பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சரிதா (40). இவர் தனது வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் புகையிலை விற்ற சரிதா மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 2 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story