எரிந்து நாசமான பக்தர்களின் செட்

எரிந்து நாசமான பக்தர்களின் செட்
தீ சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகர் அருகே குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ள பக்தர்கள் தங்கியிருந்த ஓலை செட் ஆனது நேற்று இரவு தீ பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் 7 பைக்குகள் எரிந்து நாசமாகின.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story