திருப்பூர் ,பாரப்பாளையத்தில் ரம்யம் ஷோரும் திறப்பு விழா!

திருப்பூர், பாரப்பாளையத்தில் ரம்யம் ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.
பாரப்பாளையத்தில் ரம்யம் ஷோரும் திறப்பு விழா திருப்பூர், அக். 13: திருப்பூர் மங்கலம் சாலை பாரப்பாளையத்தில் ரம்யம் ஷோரும் திறப்பு விழா நடந்தது. இதனை ராம்ராஜ் குழுமம் இயக்குனர் சுமதி நாகராஜன் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை வென்ச்சுரா கார்மெண்ட்ஸ் ராமசாமி தொடங்கி வைத்தார். ஹீரோ பேஷன் டைரக்டர் இயக்குனர் பத்மாவதி சுந்தர மூர்த்தி விற்பனையை பெற்று கொண்டார். விழாவில் ராம்ராஜ் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், தலைமை அதிகாரிகள் செல்வகுமார், கணபதி, தம்பி வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ராம்ராஜ் காட்டன் இயக்குனர்கள் ஆர்த்திகா அருண், ஈஸ்வர் தரணிகா அஸ்வின் ஆகியோர் வரவேற்றனர். இந்த ஷோரூமில் பெண்களுக்கான கோவை காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், அர்கானிக் காட்டன் சேலைகள், சந்தேரி காட்டன் சேலைகள், பெங்காலி காட்டன் சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், காதி காட்டன் சேலைகள், லினன் சேலைகள், முக்த டசர் சேலைகள், லினன் சேலைகள், வீவிங் சேலைகள், பிரிண்ட் சேலைகள், சாப்ட சில்க் சேலைகள் என ஏராளமான சேலை வகைகள் மட்டுமின்றி ட்ரஸ் மெட்டீரியல்ஸ், ரெடிமேட் காட்டன் குர்திஸ், அனார்கலி குர்திஸ், பெண்குழந்தைகளுக்கு பாவாடை செட் போன்றவை இந்த தீபாவளிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Next Story