ஆண்டிபட்டி கோட்டை- நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு.

ஆண்டிபட்டி கோட்டை- நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு.
ஆண்டிபட்டி கோட்டை- நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 52. இவர் ஆலமரத்துப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7:45 மணி அளவில், கரூர்- மதுரை சாலையில், ஆண்டிப்பட்டி கோட்டை, காமராஜபுரம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். முதியவருக்கு பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு மோட்டார் வாகனம், நடந்து சென்ற முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவருக்கு தலை, உதடு, வலது தோள்பட்டை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் ராமலிங்கத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து, முதியவர் உயிரிழந்ததை உறுதி செய்த அவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த முதியவரின் உடலை அடையாளம் காண்பதற்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்துள்ளனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர் ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story