எடப்பாடியில் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகள் தெப்ப வைபவம் நிகழ்ச்சி

எடப்பாடியில் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகள் தெப்ப  வைபவம் நிகழ்ச்சி
சேலம் மாவட்டம் எடப்பாடி பெரிய ஏரியில் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகள் தெப்பத்தில் செல்லும் வைபவம்
எடப்பாடியில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகள் தெப்பத்தில் செல்லும் வைபவம் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது.... சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டுதெரு பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகளுக்கு கடந்த 10 நாட்களாக நவராத்திரி பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் இன்று... எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரியின் வழியாக சுவாமிகளை தெப்பத்தில் வைத்து வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு செல்லும் நிகழ்வு விமர்சியாக நடைபெற்றது... அப்போது தெப்பத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் எழுந்தருளின் போது ஏராளமான பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர்....
Next Story