காங்கேயம் நகராட்சியில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

X
காங்கேயம் நகராட்சியில் ஆணையாளராக இருந்த கனிராஜ் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த பால்ராஜ் காங்கேயம் நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து பால்ராஜ் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆணையாளரை நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story

