விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிரணியினர் நியமனம்.

விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிரணியினர் நியமனம்.
ஆரணி, அக் 13. திருவண்ணாமலை மேற்கு மாவட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆரணி, அக் 13. திருவண்ணாமலை மேற்கு மாவட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மேற்குமாவட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளராக ஆரணியைச் சேர்ந்த மு.சுமதி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணை செயலாளர் தேப்பனந்தல் சேர்ந்த அப்பாக்குட்டிஜோதி, போளூர் ஒன்றியசெயலாளராக வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா, ஒன்றியதுணை செயலாளர் அத்திமூர் சேர்ந்த மீனா, ஆரணி நகர செயலாளர் கே.பவானி, நகரதுணைசெயலாளர் ஷாயின்பாபு ஆகியோர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நியமனம் செய்திருப்பதாக விடுதலைசிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மேற்கு மாவட்டசெயலாளர் ந.முத்து தெரிவித்தார். மேலும் கட்சியில் மேற்குஆரணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அம்மாபாளையம் சேர்ந்த தமிழழகன், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்டதுணை அமைப்பாளர் ஆரணி ஜெ.பரத், களம்பூர் நகரசெயலாளராக து.ஏழுமலை, களம்பூர் நகரதுணைசெயலாளர் ச.சிவராஜ், நகரபொருளாளர் கு.சுகுந்தர், போளூர் நகரசெயலாளர் ர.சஞ்சய், நகரதுணைசெயலாளர் நிஷாந்த் பாலாஜி ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.
Next Story