அகிலாண்டபுரத்தில் வீடு பிரேக்கரில் டூ வீலர் நிலை தடுமாறி கீழே விழுந்து முதியவர் உயிரிழப்பு.

அகிலாண்டபுரத்தில் வீடு பிரேக்கரில் டூ வீலர் நிலை தடுமாறி கீழே விழுந்து முதியவர் உயிரிழப்பு.
அகிலாண்டபுரத்தில் வீடு பிரேக்கரில் டூ வீலர் நிலை தடுமாறி கீழே விழுந்து முதியவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, காருடையான் பாளையம், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி என்கிற ராமன் வயது 65. இவர் அக்டோபர் 13ஆம் தேதி 4:30 மணி அளவில், கரூர்- தாராபுரம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அகிலாண்டபுரம் குகை அய்யன் கோவில் அருகே உள்ள ஸ்பீடு பிரேக்கரில் சென்றபோது டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் ராமசாமி என்கிற ராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அக்டோபர் 14ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ராமசாமியின் மகன் சுரேஷ் வயது 42 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ராமசாமி உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.
Next Story