அன்னபூர்ணா ஹோட்டல் அருகே டூவீலர்கள் மோதல் இளம் பெண் படுகாயம்.

அன்னபூர்ணா ஹோட்டல் அருகே டூவீலர்கள் மோதல் இளம் பெண் படுகாயம்.
அன்னபூர்ணா ஹோட்டல் அருகே டூவீலர்கள் மோதல் இளம் பெண் படுகாயம். கரூர் மாவட்டம், வெங்கமேடு, சிவானந்தம் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை வயது 51. இவரது உறவினர் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், அருணாச்சலம் நகரை சேர்ந்த அன்பழகன் மகள் ருத்திகா வயது 22. என்பவரை அவரது டூவீலரில் பின்னால் அமர வைத்து, சேலம் - கரூர் சாலையில் அக்டோபர் 13ஆம் தேதி மதியம் 2:15- மணி அளவில் சென்று கொண்டிருந்தார். இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் அருகே சென்றபோது, அதே சாலையில் கரூர் அடுத்த மணவாடி, சின்னமநாயக்கன்பட்டி அருகில் உள்ள ஜோதி நகரை சேர்ந்த நாகராஜ் மகன் அர்ஜித் வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், செல்லதுரை ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்திலிருந்து கீழே விழுந்தால் ரித்திகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. செல்லதுரைக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக ருத்திகாவை மீட்டு கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து செல்லதுரை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அர்ஜித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story