காந்திகிராமம்- டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் உயிரிழப்பு.
Karur King 24x7 |15 Oct 2024 2:17 PM GMT
காந்திகிராமம்- டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் உயிரிழப்பு.
காந்திகிராமம்- டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை கூடலூர் கிராமம் அருகே உள்ள குன்ன கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபாலகிருஷ்ணன் வயது 27. இவர் அக்டோபர் 14ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருச்சி -கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் காந்திகிராமம், விடியல் மருத்துவமனை அருகே சென்ற போது எதிர் திசையில் ஈரோடு மாவட்டம், நம்பியூர், பொலவபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மவுலீஸ்வரன் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், கோபாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலை மற்றும் முன் நெற்றியில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு கோபாலகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த கோபாலகிருஷ்ணனின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மவுலீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story