ஜெகதாபியில் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது.

ஜெகதாபியில் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது.
ஜெகதாபியில் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதாபி பகுதியில், கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் 14ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் ஜெகதாபி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார் சசிகலா. அப்போது ஜெகதாபி கிழக்கு தெருவை சேர்ந்த வைரப் பெருமாள் மகன் கார்த்தி வயது 24 என்பவர், 24 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக கார்த்தியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story