தொடர் மழை எதிரொலியால் பூலாம்பட்டி படகுத்துறை வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர் மழை எதிரொலியால் பூலாம்பட்டி படகுத்துறை வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சி விசைப்படகு போக்குவரத்து சுற்றுலா பயணிகள் இன்றி விசைப்படகு வெறிச்சோடியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோன்று சேலம் மாவட்டம் எடப்பாடி, கொங்கணாபுரம்,ஜலகண்டாபுரம்,தேவூர் பூலாம்பட்டி, நெடுங்குளம்,கல்வடங்கம் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிற காரணத்தால் எப்பொழுதும் பயணிகள் நிறைந்து கூட்டமாக காணப்படும் பூலாம்பட்டி படகுத்துறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து படகு துறை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பூலாம்பட்டியில் இருந்து நெருஞ்சிப்பேட்டைக்குச் செல்லும் விசைப்படகு போக்குவரத்து பயணிகள் இல்லாததால் பல மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி விசைப்படகு ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள கடைக்காரர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Next Story