பூலாம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு போலீசார் விசாரணை

பூலாம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே பக்கநாடு கிராமத்தில் பட்டப் பகலில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பக்க நாடு கிராமம் குண்டுமழைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (எ)குஞ்சுப்பையன்(47)இவர் தனது மனைவி மகேஸ்வரி தாயார் சிந்தாயி ஆகியோரோடு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பழனியப்பன் பக்கத்து ஊரில் நடந்த கபடி போட்டியை காண சென்று விட்டார். அவரது மனைவி மகேஸ்வரி மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலுக்கு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் தாயார் சிந்தாயி மற்றும் பேரக் குழந்தைகளோடு சுமார் பகல் 3 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இந்தது வீட்டில் நுழைந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்துள்ளது. உடனடியாக அவரது தாயார் பழனியப்பனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்ததின் பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க காசு இரண்டு மோதிரம் 2 தாலி ஒன்னு மொத்தம் இரண்டு பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ஒன்றரை லட்சம் திருட்டுப் போனது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டுப் போன இரண்டு பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள் பட்டப் பகலில் வீட்டின் கதையை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story