ராஜேஸ்வரி ஆஸ்ரமத்தில் குரு பூஜை விழா.

ராஜேஸ்வரி ஆஸ்ரமத்தில் குரு பூஜை விழா.
பரமத்தி வேலூர் ராஜேஸ்வரி ஆஸ்ரமத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர் - காவேரி சாலை ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தவத்திரு வை. கிருஷ்ணன் குருசாமி ஐயா அவர்களின் 27ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நிகழ்வாக குரு முதல்வர் சாது நகல்ராஜ் குருசாமி அவர்கள் முன்னிலையில் குருபூஜை விழா நடைபெற்றது.. விழாவில் கிருஷ்ணன் குருசாமி ஐயா முக்தி மூர்த்தத்திற்கு பல வகை வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பல வகை மலர்களால் உதிரிப்பூக்களினால் அர்ச்சனை செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது... அதனைத் தொடர்ந்து சாதுக்களுக்கு அன்னம் பாலிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ராஜராஜேஸ்வரி ஆலய டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பஜனை மண்டலி (சக்தி குரூப்ஸ்) மற்றும் ஐயப்பன் பக்தர்கள்பரமத்தி வேலூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story