தலைமலை கிரிவலம் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம்! -நாமக்கல் எம்பி, சேந்தமங்கலம் எம்எல்ஏ வழங்கினர்!

62வது கிரிவலமாக வந்த ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் 27 கி.மீ கிரிவலம் நடந்து வந்தனர். பக்தர்களுக்கு எருமப்பட்டி அசோக் ஸ்பின்னிங் மில் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் அவர்களின் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாதந்தோறும் பௌர்ணமி அன்று தலைமலை கிரிவலம் வருகிற பக்தர்களுக்கு நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி அடுத்த வரதராஜப்புரம் அடிவாரத்தில் தலைமலை சேவா டிரஸ்ட் மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி பௌர்ணமி தினம் நேற்று (அக்டோபர்-16) மதியம் ஆரம்பித்தது இன்று (அக்டோபர்-17) வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் கிரிவலத்தை முடித்தனர்.இதையடுத்து 62வது கிரிவலமாக அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் 27 கி.மீ கிரிவலம் நடந்து வந்தனர்.அப்படி வரும் பக்தர்களுக்கு எருமப்பட்டி அசோக் ஸ்பின்னிங் மில் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் அவர்களின் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக காலை 11 மணியளவில் உலக மக்கள் அனைவரும் நலம் பெறவும், நோய் நொடி இல்லாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கிரிவலம் வந்திருந்த பக்தர்களை தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி M.ராஜேஷ் வரவேற்றார். தொடர்ந்து 62 மாதமும் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர்.இந்நிகழ்வில் எருமப்பட்டி அட்மா குழு தலைவர் பாலு, எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, தலைமலை சேவா டிரஸ்ட் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிவராஜ், தமிழன் பிரிண்டர் செல்வகுமார், ஸ்டார் மினரல் துரைசாமி, மகாதேவி தினகரன், நாமக்கல் கண்ணன், மகிழ்ச்சி மன்றம் ராஜேந்திரன், செந்தில் பாரதி காவக்காரன்பட்டி வெங்கடாசலம்,கலிங்கன் , முருகாலாய ஜவுளி ஸ்டோர் ராஜேந்திரன் அறங்காவலர் கலைச்செல்வன்,பொருளாளர் கர்ணன் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.கிரிவலம் வந்தவர்கள் அனைவரும் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ ஆகியோருடன் குழு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
Next Story