பரமத்தி வேலூர் அருகே வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் விழுந்து ஒருவர் பலி.

பரமத்தி வேலூர் அருகே வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் விழுந்து ஒருவர் பலி.
பரமத்தி வேலூர் அருகே வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் விழுந்து ஒருவர் பலி போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், அக்.17- நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூர் தாலுகா, பொன்மலர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சடையான். இவரது மகன் பாலமுருகன் (20). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு தண்ணீரிலேயே விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. காவிரி ஆற்றிக்கு குளிப்பதற்காக வந்தவர்கள் பாலமுருகன் இறந்து கிடப்பது குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவல் அறிந்து அங்கு வந்த பாலமுருகனின் பெற்றோர் வேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story