கர்நாடக மது கடத்தியவர் கைது

கர்நாடக மது கடத்தியவர் கைது
கர்நாடக மது கடத்தியவர் கைது
கர்நாடக மது கடத்தியவர் கைது தாளவாடி அருகே உள்ள தமிழக-கர்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் ஆசனூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 8 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மாதேவா (வயது 45) என்பதும், அவர் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தத்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story