டி.என்.பாளையம் அருகே கஞ்சா விற்றவர் கைது

டி.என்.பாளையம் அருகே கஞ்சா விற்றவர் கைது
டி.என்.பாளையம் அருகே கஞ்சா விற்றவர் கைது
டி.என்.பாளையம் அருகே கஞ்சா விற்றவர் கைது டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் ரைஸ் மில் வீதி அருகே பங்க ளாப்புதூர் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர். கே.என். பாளையம் ரைஸ் மில் வீதியை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகன் சவுந்தர் (வயது 25) என்பதும், அவர் விற்பனைக்காக 10 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ரோந்து மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
Next Story