சட்டவிரோதமாக மது விற்ற பெண் கைது

சட்டவிரோதமாக மது விற்ற பெண் கைது
தோகைமலை போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மனைவி சுமதி (30). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் மது விற்ற சுமதி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story