ஜோலார்பேட்டையில் அதிமுக செயல் வீரக்கள் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி என திமுக மீது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி என திமுக மீது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடந்த தேர்தலில் போது எடப்பாடியார் குடும்ப பெண்களுக்கு 1500கொடுப்பதாக கூறினார். ஆனால் திமுக 534 பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தனர். தற்போது திமுக ஆட்சியால் தமிழகத்தில் உள்ள குடும்பங்களின் மேல் வருடம் 5 ஆயிரத்திலிருந்து 10000வரை கடன் சுமை உள்ளதாகவும் திமுக குடுப்பத்திற்காக ஆட்சி செய்து வாரிசு அரசியல் செய்து வருகின்றனர் எனவும் விஞ்ஞான ரீதியான திமுக ஊழல் செய்து வருகிறது மேலும் தமிழகத்தில் நடைப்பெறும் திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியால் எந்தவொரு கொள்கையும் இல்லை என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு வைத்தார். அப்போது மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன்,மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் ர.ரமேஷ்,மாவட்ட மாணவரணி செயலாளர் தனஞ்செயன், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல தலைவர் டாக்டர்.நாகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி.சுப்பிரமணி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட,நகர, ஒன்றிய அதிமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story